பயமுறுத்தும் கர்ப்பப்பை கட்டிகள் !

பெரும்பாலான பெண்கள் மார்பககட்டி, கர்ப்பப்பை கட்டியினால் பாதிக்கப்படுகிறார்கள். பொதுவாக
பயமுறுத்தும் கர்ப்பப்பை கட்டிகள் !

பெரும்பாலான பெண்கள் மார்பககட்டி, கர்ப்பப்பை கட்டியினால் பாதிக்கப்படுகிறார்கள். பொதுவாக இந்த இடங்களில் கட்டி இருப்பது போன்று தோன்றினாலே நாம் உடனடியாக நினைப்பது அது புற்று நோயாக (cancer) இருக்குமோ என்றுதான். எந்தவொரு சந்தேகமான கட்டிகளையும் சோதித்து அவை புற்று நோயல்ல என்று உறுதிப் படுத்திக் கொள்வது மிகவும் அவசியம். காரணம் சில சமயங்களில் நம் சந்தேகிப்பது போலவே கருப்பையிலே புற்று நோய் கட்டியாகவும் வளரலாம். ஆனால் அதைவிட மிகவும் பொதுவாக ஏற்படும் புற்று நோயல்லாத ஃபைபரோயிட் (Fibroid) எனப்படும் கட்டிகள் பற்றி நிறையபேர் கேள்விப்பட்டு இருப்பீர்கள். இந்த வகையான கட்டிகள் குறித்து மருத்துவர்கள் சொல்வது என்ன?

இந்த ஃபைபரோயிட்(fibroid)எனப்படும் கட்டிகள் என்பது கருப்பையின் சுவரிலே இருக்கும் தசையில் இருந்து உருவாகும் கட்டியாகும். இது தனியாக இருக்கலாம் அல்லது கருப்பையில் பல கட்டிகள் சேர்ந்தும் இருக்கலாம்.

45 வயதிலே இருக்கும் 100 பெண்களை சோதித்தால் கிட்டத்தட்ட 40 பேருக்கும் மேல் பலருக்கு இந்த கட்டிகள் இருக்கலாம். இளம் பெண்களுக்கும் ஏற்படலாம். ஆனால் எல்லாப் பெண்களிடத்திலும் இதற்கான அறிகுறிகளை வெளிக்காட்டாததால் நிறையப் பேருக்கு தங்களுக்கு இந்தக் கட்டிகள் இருப்பதே தெரியாமல் போய் விடுகின்றது. மாதவிடாய் நேரத்தில் அதிக உதிரப் போக்கு, அடிவயிற்றிலே ஏதோ இருப்பது போன்ற உணர்வு, அடிவயிறு வீங்குதல், அதிகம் சிறு நீர் வெளியேறுதல் ஆகியவை அதன் அறிகுறிகளாகும்.

ஆனால் இந்தவகையான கட்டி புற்று நோயால் ஏற்படும் கட்டியல்ல. மேலும் இந்தக் கட்டி பிற்காலத்தில் புற்று நோயாக மாறுவதற்கான சந்தர்ப்பமும் மிகவும் குறைவானது. இதனால் யாருக்காவது (fibroid) கட்டிகள் உள்ளன என்றால் பயப்பட வேண்டியதில்லை.

சில பேருக்கு குழந்தையின்மைப் பிரச்னை ஏற்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாக அமையலாம். ஏனென்றால் சில கட்டிகள் கருப்பையின் சுவரின் உட்புறமாக (அதாவது உருவாகிய சிசு கருப்பையின் உள்ளே ஒட்டிக் கொள்கின்ற இடத்திலே) இருக்கும் போது குழந்தை சரியாக கருப்பையில் நிலை கொள்ளாமல் அழிந்து போகலாம்.

ஆனால் இவ்வாறு ஏற்படுகிற சந்தர்ப்பம் குறைவு. மற்றும் இந்தக் கட்டிகள் இருக்கும் எல்லாப் பெண்களுக்கும் இது ஏற்படுவதில்லை. மிக சிலருக்கே ஏற்படும்.

மற்றும் கருப்பையின் உள்புறமாக இல்லாமல் சற்று வெளிப்புறமாக இருக்கும் கட்டிகளால் குழந்தை உருவாக்கத்திற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை.

இந்தக் கட்டிகளைக் கொண்ட ஒரு பெண் கர்ப்பம் தரித்த பின்பு பிரச்னைகள் ஏற்படலாம். காரணம் குறிப்பாக குழந்தை கீழ் இறங்குவதை இந்தக் கட்டிகள் தடுப்பதால் சுகப்பிரசவமாக முடியாமல் போகலாம்.

 இந்த கட்டிகள் இரண்டு விதமாக அகற்றப்படலாம். ஒன்று கருப்பையோடு சேர்த்து அகற்றுதல்(Hysterectomy). மற்றொன்று கருப்பை இருக்க கட்டி மற்றும் அகற்றப்படுதல்(myomectomy). குறிப்பாக குழந்தை பெறுவதற்காக காத்திருக்கும் இளம் பெண்களில் கருப்பை இருக்க கட்டிகள் மட்டும் அகற்றப்படும். ஆகையினால் ஒருவருக்கு கட்டிகள் இருப்பது போன்று தோன்றினால் அலட்சியமாக இல்லாமல் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com