திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டத்தில் அமைந்துள்ளது சைதன்யபுரம் என்கிற சேதினிபுரம். முடிகொண்டான் என்ற நதி இவ்வூரை அணைத்துக்கொண்டு ஓடுகிறது. விநாயகர், பெருமாள், ஐயனார், பிடாஹாரி, காளி, மஹாமாரி ஆகிய தேவஸ்தானங்கள் அமைந்து நல்லூராக விளங்குகிறது. "சுக்ல யஜூர் வேதம்' என்ற ஒப்பற்ற வேதத்தை நமக்கு அருளியவர் ஸ்ரீயாக்ஞவல்க்ய மகரிஷி. காசியிலிருந்து வந்த சிந்தாமணி பட்டர் என்பவர் இவ்வூரைச் சேர்ந்தவர்களுக்கு இவ்வேதத்தைக் கற்பித்தார். எனவே இவ்வூர் மக்கள் "சுக்ல யஜூர் வேதிகள்' என்றே அழைக்கப்படுகின்றனர்.
இத்தலத்தில்தான் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் அருள்புரிகிறார். பல்வேறு பெருமைகள் வாய்ந்த இக்கோயில் சிதிலமடைந்துள்ளது. தற்போது திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. "ஸ்ரீ சைதன்யபுர ஆஸ்திக சமாஜ்' என்ற அமைப்பு திருப்பணிகளை மேற்கொண்டுள்ளது.
மேலும் தகவலுக்கு: 90030 34098, 99529 04445.