மந்திரங்களை உச்சரிப்பு மாறாமல் தெரிந்து கொண்டு பிழையில்லாமல் ஒலித்து ஜெபம் செய்ய பழகிக் கொள்ள வேண்டும். சரியாகத் தெரிந்து கொள்ளாமல் ஜெபம் செய்வதால் குற்றங்கள் உருவாகும் வாய்ப்புகள் உண்டு. பிழையோடு உச்சரிப்பதால் ஒரு தோஷம் உண்டாகிறது. அதை ஜெபம் மந்திர தோஷம் என்பார்கள். எனவே, தகுந்த குருநாதரைச் சரணடைந்து மந்திரங்களைத் தெளிவாக உச்சரிக்கத் தெரிந்து கொண்டு ஜெபம் செய்தால் மந்திர தோஷம் வராது.