திருவண்ணாமலை, செய்யாறிலிருந்து (சேத்பட் செல்லும் வழியில்) 12 கி.மீ. தொலைவில் உள்ளது கொரக்கை கிராமம்! இவ்வாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட திருப்பணி குறித்து 15-11-2013 வெள்ளி மணியில் வெளியாகி இருந்தது. ஆலயம் தற்போது முற்றிலும் புதுப்பிக்கப்பட்டு அழகுற திகழ்கின்றது.
புதிதாக, ஆஞ்சநேயர் சந்நிதி, தீப ஸ்தம்பம், துவாரபாலகர்கள், திருமஞ்சன உபயோகத்திற்கான புதிய கிணறு, கருட வாகனம் ஆகியவை கட்டி முடிக்கப்பட்டுள்ளன. பூமி- நீளா தேவியர்கள் சமேத வரதராஜப் பெருமாளுடன், ஸ்ரீலட்சுமி நாராயணரும் சேர்ந்து சேவை சாதிக்கிறார்கள். பல வருடங்களுக்குப் பிறகு மே 12 ஆம் தேதி மகாசம்ப்ரோக்ஷண வைபவம் நடந்தேறியது. பக்தர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய திருத்தலம் கொரக்கை.
தொடர்புக்கு: 94444 87474