கொரக்கை ஸ்ரீ வரதராஜப் பெருமாளுக்கு மகாசம்ப்ரோக்ஷண வைபவம்!

திருவண்ணாமலை, செய்யாறிலிருந்து (சேத்பட் செல்லும் வழியில்) 12 கி.மீ. தொலைவில் உள்ளது
கொரக்கை ஸ்ரீ வரதராஜப் பெருமாளுக்கு மகாசம்ப்ரோக்ஷண வைபவம்!

திருவண்ணாமலை, செய்யாறிலிருந்து (சேத்பட் செல்லும் வழியில்) 12 கி.மீ. தொலைவில் உள்ளது கொரக்கை கிராமம்! இவ்வாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட திருப்பணி குறித்து 15-11-2013 வெள்ளி மணியில் வெளியாகி இருந்தது. ஆலயம் தற்போது முற்றிலும் புதுப்பிக்கப்பட்டு அழகுற திகழ்கின்றது.

புதிதாக, ஆஞ்சநேயர் சந்நிதி, தீப ஸ்தம்பம், துவாரபாலகர்கள், திருமஞ்சன உபயோகத்திற்கான புதிய கிணறு, கருட வாகனம் ஆகியவை கட்டி முடிக்கப்பட்டுள்ளன. பூமி- நீளா தேவியர்கள் சமேத வரதராஜப் பெருமாளுடன், ஸ்ரீலட்சுமி நாராயணரும் சேர்ந்து சேவை சாதிக்கிறார்கள். பல வருடங்களுக்குப் பிறகு மே 12 ஆம் தேதி மகாசம்ப்ரோக்ஷண வைபவம் நடந்தேறியது. பக்தர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய திருத்தலம் கொரக்கை.

தொடர்புக்கு: 94444 87474

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com