ஈஷா மூலம் நேபாளம் சென்ற 80 பேர் மாயம்! ஜக்கி வாசுதேவ் கண்ணீர்!தலைமைச் செயலாளர் மீது நடவடிக்கை வேண்டும்! முதல்வர் விஜய்க்கு பெ. சண்முகம் கடிதம்!தங்கம் விலை குறைந்தது! வெள்ளி விலை? இன்றைய நிலவரம்!சீன நாள்காட்டியால்.. தமிழர்களின் நேபாள பயண திட்டம் மாறியதா? தில்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு கெடு விதித்த கரப்பான்பூச்சி மக்கள் கட்சி! காரணம் என்ன?ஒருநாள் விடுமுறைக்குப் பின் மீண்டும் கூடியது பேரவை! செங்கல்பட்டிலிருந்து சென்னை வர 3 மணி நேரம் ஆகிறது: ஆதவ் அர்ஜுனாகுழந்தைகள், முதியோரிடையே அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு: தடுப்பூசி செலுத்த மருத்துவா்கள் அறிவுறுத்தல்

யசோதையின் பரிதவிப்பு!

திருமாலைத் தம்முடைய மருமகனாகப் பெறும் பேறுபெற்றவர் பெரியாழ்வார்!

Published On :5 ஜனவரி 2024, 10:46 am IST

திருமாலைத் தம்முடைய மருமகனாகப் பெறும் பேறுபெற்றவர் பெரியாழ்வார்! கண்ணன் அவதாரத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட பெரியாழ்வார், கண்ணனின் குழந்தைப் பருவ நிகழ்வுகளைத் தம்முடைய பாசுரங்களில் விவரிக்கும் சிறப்பு படிப்போரைக் கட்டுண்ணச் செய்யும்.

இது கோடை காலமாதலால் வெளியில் போகும்போது குடையும், செருப்பும் இல்லாமல் எவரும் செல்வதில்லை. அதேபோல் ஆயர்பாடியில் குடையும், செருப்பும் இல்லாமல் கண்ணனைக் கானகத்திற்கு அனுப்பியதை எண்ணித் துடிக்கும் யசோதையின் பரிதவிப்பை பெரியாழ்வார் தம்முடைய பாசுரத்தில் வெளிப்படுத்துகிறார்:

குடையும் செருப்பும் கொடாதே

தாமோதரனை நான்

உடையும் கடியன ஊன்று

வெம் பரற்கள் உடைக்

கடிய வெங்கானிடைக் கால்

அடிநோவக் கன்றின் பின்

கொடியென் என் பிள்ளையைப்

போக்கினேன் எல்லே பாவமே

என்பதில், "கூர்மையான கற்கள் நிறைந்து கிடக்கும் கானகத்திற்கு ஆநிரைகளை மேய்ப்பதற்கு காலில் செருப்பு அணியாமலும், கொடிய வெயிலுக்குப் பிடித்துக் கொள்ள குடையும் எடுத்துக் கொள்ளாமலும் என் மகன் போய்விட்டானே. என் மகனுக்கு குடையும், செருப்பும் கொடுத்தனுப்பாத பாவியாகி விட்டேன்'' என்று யசோதை கண்ணனை நினைத்துப் பரிதவிக்கின்றாள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.