ஸ்ரீ யாக்ஞவல்கியர் ஜெயந்தி மகோத்சவம்

ஸ்ரீ யாக்ஞவல்கியர் சிறந்த யோகீஸ்வரர்! இவர் சுக்லயஜுர் வேதத்தை காயத்ரி தேவியின்
ஸ்ரீ யாக்ஞவல்கியர் ஜெயந்தி மகோத்சவம்

ஸ்ரீ யாக்ஞவல்கியர் சிறந்த யோகீஸ்வரர்! இவர் சுக்லயஜுர் வேதத்தை காயத்ரி தேவியின் வழிகாட்டலின்படி சூரிய பகவானிடம் கற்று வெளிக்கொணர்ந்தவர். எண்ணற்ற கிரந்தங்களை இயற்றியவர். இவருடைய பிரகதாரண்ய உபநிஷத் என்ற நூல் ஆன்மிகத்தையும் ஆன்மாவின் மேன்மையையும் விவரிக்கின்றது. இவருடைய ஸ்மிருதிகள் பல சட்ட நுணுக்கங்களை தெளிவாகத் தெரிவிக்கின்றது.

சென்னை பழைய பல்லாவரம், பெருமாள் கோயில் தெருவில் ஸ்ரீ யாக்ஞவல்கியர் மகரிஷிக்காக ஒரு மகத்தான ஆலயத்தை ஸ்ரீ யாக்ஞவல்கியசபை என்ற அமைப்பு கடந்த 2000 ஆம் ஆண்டு அமைத்தது.

இவ்வாலயத்தில் ஸ்ரீ யோக கணபதி, காத்யாயினீ சமேத ஸ்ரீ யாக்ஞவல்கியர், சூரிய பகவான், காயத்ரி தேவி, மைத்ரேயீ தெய்வங்களுக்குத் தனித்தனி சந்நிதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீ யாக்ஞவல்கியர் மகரிஷி ஜெயந்தி மகோத்சவம் இவ்வாண்டு, 3.11.2014 ஆம் தேதி துவங்கி 9.11.2014 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, சதுர்வேத பாராயணங்கள், ஹோமங்கள்,குத்துவிளக்கு பூஜை, உபன்யாசங்கள் நடைபெற இருக்கின்றன. பக்தர்கள் இந்த மகோத்சவத்தில் கலந்து கொண்டு ஸ்ரீ யாக்ஞவல்கியர் அருள் பெறலாம்.

தொடர்புக்கு: 044 2247 7215/ 98400 51587.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com