தடைகளை நீக்கும் தேவன்!

அமெரிக்காவில் ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டுபிடிக்கும்போது, எத்தனையோ தடைகள் வந்தன.
தடைகளை நீக்கும் தேவன்!

அமெரிக்காவில் ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டுபிடிக்கும்போது, எத்தனையோ தடைகள் வந்தன. முதல் விமானம் சில அடி தூரம்கூட பறக்கவில்லை. கீழே விழுந்து நொறுங்கியது. என்றாலும், அவர்கள் சோர்ந்து போய்விடவில்லை.

திரும்பவும் குறைகளை நிவர்த்தியாக்கி, மீண்டும் பறக்கவிட்டார்கள். ஒருமுறை இந்த விமானத்தை பறக்கவிடும்போது, அதை 25 போர்வீரர்கள் கயிறு கட்டி, நிறுத்த வேண்டிய நேரத்திலே நிறுத்தும்படி, காத்திருந்தார்கள். ஆனால் அந்த விமானம் மீண்டும் திடீரென்று புறப்பட்டதினால், அந்த வீரர்களும், விமானத்தோடு உயர செல்ல வேண்டியதிருந்தது. மிக உயரமாய் போகிறதே என்று அந்த வீரர்களெல்லாம் பயந்து நடுங்கி, ஒவ்வொருவராக கயிறை விட்டுவிட்டு, கீழே விழுந்து மரித்தார்கள். ஆனால் ஒரு வீரன் மட்டும், தன் முயற்சியை கைவிடாமல், கர்த்தர் கொடுத்த ஞானத்தின்படியே, தான் தொங்கிக்கொண்டிருந்த அதே கயிற்றை, தன்னைச் சுற்றி கொண்டுவந்து, ஒரு முடிச்சு போட்டு அதிலே உட்கார்ந்து கொண்டான். விமானம் கீழே இறங்கியபோது, பத்திரமாக கீழே வந்து சேர்ந்தான். ஆம், எந்த முயற்சியை எடுத்தாலும், நிச்சயமாகவே அதிலே தடைகளும், அதிலே இடையூறுகளும் வரத்தான் செய்யும். நம்முடைய வேலைக்கு சரியான ஆட்கள் கிடைக்காமலிருக்கலாம். அதிகாரிகள் வந்து தேவையில்லாத கேள்வியைக் கேட்டு, மனமடிவடைய செய்யக்கூடும். ஆனாலும் தளர்ந்து போகாதிருந்தால், ஏற்ற காலத்தில், தேவன் நம்மை உயர்த்துவார்.

அதுபோல, இரண்டாம் உலக மகா யுத்தத்திலே, ஜப்பான் படுதோல்வியடைந்து, பொருளாதாரம் மிகவும் சீர்குலைந்துபோனது. ஜப்பான் மேல், அமெரிக்கா அணுகுண்டுகளை பொழிந்தது. ஹிரோசிமா, நாகசாகி என்ற பட்டணங்கள் முற்றிலும் எரிந்து தரைமட்டமானது. எல்லா பக்கமும் அவமானம், தலைக்குனிவு. எனினும் ஜப்பானியர் சோர்ந்துவிடவில்லை. தங்கள் முயற்சியை கைவிட்டு விடவில்லை. இன்று எல்லாத் துறைகளிலும், முன்னேறி, உலக நாடுகளை விட முன்னணியில் நிற்கிறார்கள்.

தடைகளை நீக்கிப் போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்து போகிறார். அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப் போவார். கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்து போவார் (மீகா. 2:13) என்ற வசனத்தின்படி, பெரிய பிரச்சனைகள், பெரிய தடைகள், பெரிய போராட்டங்களைப் பார்த்து, அநேகர் தாங்கள் எடுக்கும் நல்ல முயற்சியை விட்டு விடுகிறார்கள். அவைகளெல்லாம் பார்வைக்கு பெரிதானவைகளாய் தோன்றலாம். ஆனால், கர்த்தருடைய வல்லமையை விட, அவை பெரிதானதல்ல. ஆகவே தடைகளைப் பார்க்காமல்,கர்த்தரை நோக்கிப் பார்க்கும்போது தேவன் தடைகளை நீக்கி நமக்கு வெற்றியைத்தருவார்.
- ஒய்.டேவிட்ராஜா.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com