ஸ்ரீ யாக்ஞவல்க்ய ஜெயந்தி மகோத்சவம்
ஸ்ரீ யோகீச்வர யாக்ஞவல்க்ய பரமாச்சார்யாளின் ஜெயந்தி மகோத்சவம் சென்னை பழைய பல்லாவரம் பெருமாள் கோயில் தெருவில் உள்ள ஸ்ரீ யாக்ஞவல்க்ய சபா மண்டபத்தில் நவ-1ஆம் தேதி தொடங்கி 5ஆம் தேதி வரை நடைபெறுகின்றது. இதனை முன்னிட்டு நாமசங்கீர்த்தனம், வேதபாராயணம், யாக்ஞவல்க்ய சகஸ்ரநாமம், மூலமந்த்ர ஹோமம், உபன்யாசம், இன்னிசை நிகழ்ச்சி, பரத நாட்டியம், சுவாஸினி பூஜை, குத்துவிளக்கு பூஜை போன்ற ஆன்மிக நிகழ்வுகள் நடைபெறுகின்றன. நவ-5ஆம் தேதியன்று நடைபெறும் முக்கிய விழாவிற்கு பக்தர்கள் பங்கேற்கும் பொருட்டு பல்லாவரம் ரயில் நிலையத்திலிருந்து இலவச வேன் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சபையினர் தெரிவிக்கின்றனர்.
தகவல்களுக்கு: 044-22477215.
திருமூல நாயனார் குருபூஜை விழா
"திருமந்திரம்' அளித்த திருமூலரின் அவதாரத் தலமான 69-சாத்தனூரில் அமைந்துள்ள திருமூல நாயனார் திருக்கோயிலில் திருமூலரின் குருபூஜை விழா நவ-3ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று காலை 7.30 மணி முதல் நடைபெறுகிறது. கும்பகோணம்-மயிலாடுதுறை சாலையில் ஆடுதுறையிலிருந்து கிழக்கே 3 கி.மீ. தொலைவில் 69-சாத்தனூர் உள்ளது.
தொடர்புக்கு: எம்.சந்திரசேகரன்-9444431691