சுசீந்திரம் கோபுரத்தின் மேற்குப்புறம் ஊஞ்சல் மண்டபம் எதிரில் "மண்டையடி சாமி' என்று உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் "ஜுர தேவ மூர்த்தி' சிற்பம் இருக்கிறது.
அதன் தலையில் சுக்கும் நல்ல மிளகும் அரைத்து பூசியிருப்பதையும் காணமுடிகிறது. தலைவலிக்கு நாட்டு வைத்திய முறையில் கை மருந்தாக இதைத் தலையில் தேய்த்து வருவதை இன்றும் பார்க்கிறோம்.
திருவிதாங்கூர் மன்னராய் இருந்த மார்தாண்டவர்மா மகராஜாவுக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டது. ஜுரதேவ மூர்த்தி தெய்வத்தின் மகிமையை அறிந்த மன்னர்
பூஜைகள் நடத்தி மேற்கண்ட கலவையை சுவாமி தலையில் தேய்த்து வழிபட்டதன் மூலம் அவருடைய வழிபாட்டு செலவுக்காக எட்டு ஏக்கர் நிலம் விட்டுக்கொடுத்ததாகவும் அறிய முடிகிறது.