புரட்டாசி பிரம்மோற்ஸவம்
கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை, அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோயிலில் புரட்டாசி பிரம்மோற்ஸவம் செப்டம்பர் 13 - இல் தொடங்கி அக்டோபர் 3 வரை நடைபெறும். செப்டம்பர் 21 - திருத்தேர், செப்டம்பர் 26, 30-வெள்ளி கருட சேவை.
தொடர்புக்கு: 04324 257531.
திருப்பணி
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், கொரட்டி கிராமத்தில் சுமார் 300 ஆண்டுகள் பழைமையான அருள்மிகு உடைய நாயகி அம்பாள் சமேத அருள்மிகு உடைய நாயனார் ஈஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இவ்வாலயம், குன்றக்குடியிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது. இத்திருக்கோயில் மிகவும் சிதிலமடைந்த நிலையில் காணப்படுவதால் புதுப்பிக்க வேண்டிய நிலையில் உள்ளது. இக்கோயிலை புதுப்பிக்க வேண்டி கமிட்டி ஏற்படுத்தப்பட்டு திருப்பணி வேலைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. பக்தர்கள் இத்திருப்பணியில் பங்கு கொண்டு ஈசன்அருள் பெறலாம்.
தொடர்புக்கு: 96988 07442.