மஹாகும்பாபிஷேகம்
வேலூர் மாவட்டம், ஆற்காடு வட்டம், சென்னசமுத்திரம் கிராமத்தில் அருள்மிகு ஞானாம்பாள் சமேத அருள்தரும் ஞானபுரீஸ்வரர் எழுந்தருளி அருள்புரியும் ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தின் மஹாகும்பாபிஷேகம் 17.02.2019 , காலை 6.30 மணி முதல் 8.00 மணி வரை நடைபெறுகின்றது.
தொடர்புக்கு: 94862 58863/ 85084 43811.
திருநட்சத்திர மஹோத்ஸவம்
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் ஊராட்சியில் அமைந்துள்ள திருமலைவையாவூர் திருமலையில் அமைந்துள்ள ஆலயத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கிறார் குலசேகராழ்வார். ஸ்ரீ குலசேகராழ்வாருடைய திருவவதாரத் திருநாள், மாசி, புனர்பூசம் நட்சத்திரம் ஆகும். ஆழ்வாரின் திருநட்சத்திர மஹோத்ஸவம், 17.02.2019, காலை 6.00 மணிக்கு துவங்கி அன்று முழுவதும் நடைபெறுகின்றது.
தொடர்புக்கு: 98400 64029.
திருப்பணி
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு - வந்தவாசி சாலை வழியில் உள்ளது கீழ்க்குளத்தூர். இவ்வூரின் வடகிழக்கு மூலையில் பழைமையான அகத்தீசுவரமுடையார் திருக்கோயில் உள்ளது. கோயிலின் கருவறைச் சுவரில் சோழர்காலக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இக்கோயில் முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தில் (கி.பி 1012 - 1044) காலத்தில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்பதையும், கோயிலுக்கு அளிக்கப்பட்ட நிலத்தின் எல்லையும் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளன. சோழர் காலத்தில் இக்கோயில் சிறப்பிடம் பெற்று விளங்கியதை அறியமுடிகின்றது.
ஒரு காலத்தில் சீரும், சிறப்புமாக வழிபாட்டில் தலைசிறந்து விளங்கிய கீழ்க்குளத்தூர் அகத்தீசுவரமுடைய மகாதேவர் திருக்கோயில், காலப்போக்கில் முறையாகப் பராமரிக்காததால் விமானத்தின் மீதும் மகாமண்டபத்தின் மீதும் புதர்கள் மண்டியிருந்தன. இக்கோயிலின் நிலைபற்றி அறிந்த சென்னை அண்ணாமலையார் அறப்பணிக்குழு என்ற அமைப்பினர் கடந்த 2015- ஆம் ஆண்டு ஊர்மக்களின் ஒத்துழைப்புடன் உழவாரப் பணியை மேற்கொண்டு ஆலயத்தை தூய்மைப்படுத்தினர். தொடர்ந்து ஊர் மக்கள் முயற்சினால் புனராவர்த்தன வேலைகள் மேறகொள்ளப்பட்டு ஆலயம் முற்றிலும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மஹாகும்பாபிஷேக வைபவம் பிப்ரவரி 18 -ஆம் தேதி காலை 6.00 மணியளவில் நடைபெறுகின்றது. யாகசாலை பூஜைகள் பிப்ரவரி 16 -இல் ஆரம்பமாகிறது.
தொடர்புர்கு: 97860 98250.
- ஸ்ரீதரன்