அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம்
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், விஷ்ணம் பேட்டை, திருக்கானூர் ஸ்ரீ சௌந்தரநாயகி அம்பாள் சமேத ஸ்ரீ கரும்பேஸ்வர ஸ்வாமி திருக்கோயிலில் (காவிரி வடகரை தலங்களில் 56 -ஆவது தலம்) ஜூன் 14 -ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு மேல் 8.00 மணிக்குள் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் நடைபெறுகின்றது. தஞ்சாவூருக்கு தென்மேற்கே 12 கி.மீ. தூரத்தில் உள்ளது இத்தலம்.
காஞ்சி மாவட்டம், ஸ்ரீ பெரும்புதூர் வட்டத்தில் வல்லக்கோட்டை முருகன் கோயிலுக்கு அருகில் உள்ளது எறையூர் அருள்மிகு இன்பாம்பிகை உடனுறை இருள் நீக்கீசுவரர் திருக்கோயில். சமீபத்தில் இவ்வாலயத்தில் சென்னை டி.வி.எஸ்.சுந்தரம் கிளேட்டன் கம்பெனி மூலம் பல்வேறு திருப்பணி வேலைகள் மேற்கொள்ளப்பட்டு ஆலயம் புதுப்பிக்கப்பட்டு வர்ண கலாபங்கள் செய்யப்பட்டுள்ளன. ஜூன் 20 -ஆம் தேதி, வியாழனன்று காலை 10 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் மூலஸ்தான மூர்த்திகள், பரிவாரங்கள் மற்றும் 27 நட்சத்திர மரங்களுக்கான சிவலிங்கங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. யாகசாலை பூஜைகள் ஜூன் 18 -இல் தொடங்குகிறது.
தாம்பரம் - வல்லக்கோட்டை மற்றும் ஸ்ரீ பெரும்புதூர் - செங்கற்பட்டு செல்லும் பேருந்துகளில் இத்திருத்தலத்திற்கு செல்லலாம். பஸ் நிறுத்தம்: எறையூர் கூட்டு ரோடு.