நிகழ்வுகள்

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு அருள்மிகு பிராணாம்பிகா சமேத அருள்மிகு தர்பாரண்யேஸ்வர சுவாமி திருக்கோயிலில் மூலவர் -அம்பாள் மற்றும் ஸ்ரீ நகவிடங்க

மஹாகும்பாபிஷேக விழா
 புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு அருள்மிகு பிராணாம்பிகா சமேத அருள்மிகு தர்பாரண்யேஸ்வர சுவாமி திருக்கோயிலில் மூலவர் -அம்பாள் மற்றும் ஸ்ரீ நகவிடங்க செண்பக தியாகேச பெருமான், அனுக்கிரக மூர்த்தியாகிய அருள்மிகு சனீஸ்வர பகவான் மற்றும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் வரும், 11.02.2019, காலை 9.10 மணிக்குமேல் 10.10 மணிக்குள்ளாக மஹாகும்பாபிஷேகம் நடைபெறுகின்றது. பூர்வாங்க ஹோமங்கள் மற்றும் பூஜைகள் பிப்ரவரி 3 -ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
 ஈரோடு மாவட்டம், கோபி வட்டம், காசிபாளையம் தடப்பள்ளி கிராமம் சிவகிரி எனும் குமரன் கரட்டில் அமைந்துள்ள மூன்று முக ஸ்ரீ முத்து வேலாயுத சுவாமி திருக்கோயிலில் 15.02.2019, காலை 9.00 மணிக்கு மேல் 10.00 மணிக்குள் மஹாகும்பாபிஷேகம் நடைபெறுகின்றது.
 தொடர்புக்கு: 82480 04435/ 97862 85405.
 ராகு-கேது பெயர்ச்சி விழா
 திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், காஞ்சிபுரம் - வந்தவாசி நெடுஞ்சாலையிலுள்ள உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தின் தெற்கே (கூழமந்தல் ஏரிக்கரை) எழுந்தருளி அருள்பாலிக்கும் அருள்மிகு நட்சத்திர விருட்ச விநாயகர் திருக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு ராகு-கேது பகவான், 13.02.2019, புதன்கிழமை மதியம் 1.25 மணியளவில் மிதுன, தனுசு ராசிகளுக்குப் பெயர்ச்சி ஆகிறார்கள். அதனை முன்னிட்டு ராகு-கேது பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறுகின்றது.
 தொடர்புக்கு: 94451 20996.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com