நிகழ்வுகள்

தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டம் உம்பலப்பாடி கிராமத்தில் உள்ளது சந்திரன் வழிபட்ட 1000 ஆண்டுகள் பழைமையான அருள்மிகு ஆனந்தவல்லி அம்பாள் சமேத நிலாவணை மகாதேவர் திருக்கோயில்

கொடிமர பிரதிஷ்டை விழா
தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டம் உம்பலப்பாடி கிராமத்தில் உள்ளது சந்திரன் வழிபட்ட 1000 ஆண்டுகள் பழைமையான அருள்மிகு ஆனந்தவல்லி அம்பாள் சமேத நிலாவணை மகாதேவர் திருக்கோயில். பல ஆண்டுகளுக்குப் பிறகு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் கடந்த ஆண்டு மே 2018 -இல் நடந்தேறியது. தற்போது மே 3 -ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று சம்வத்சராபிஷேக (முதலாண்டு பூர்த்தி) விழாவும், கோயிலில் கொடிமர பிரதிஷ்டை விழாவும் சிறப்பாக நடைபெறுகின்றது. 
தொடர்புக்கு: ஈ. பாலசுப்பிரமணியன் -93606 70620.
••••••••••••••
ஸ்ரீ ஆதிசங்கர ஜயந்தி மகோத்சவம்
குரோம்பேட்டை நேரு நகர் சங்கர்லால் ஜெயின் தெருவில் கலவை குருபரம்பரா வேத வித்யா ட்ரஸ்ட் ஆதரவில் நடைபெறும் ஸ்ரீ சங்கர மடம் வேதபாடசாலையில் ஸ்ரீ ஆதிசங்கர ஜயந்தி மகோத்சவம் மே 5 - இல் தொடங்கி 9 வரை சிறப்பு ஹோமங்கள், பாராயணங்கள், பூஜைகள், உபன்யாசம், கச்சேரி மற்றும் நாமசங்கீர்த்தன வைபவங்களுடன் நடைபெறுகின்றது. 
தொடர்புக்கு: சிவகுமார் சர்மா - 9444139934.
••••••••••••••
வசந்தோற்சவம்
கும்பகோணம் அருகில் திருவிசலூர் ஸ்ரீதர அய்யாவாள் சந்நிதியில் மே 7 -ஆம் தேதி, அட்சயத் திருதியைன்று வசந்தோற்சவம் உஞ்சவ்ருத்தி, பஜனை, பூஜையும், மே 8-ஆம் தேதியன்று ஸ்ரீ கோணங்கிதாஸர் சேவையும் நடைபெறுகின்றது. 
தொடர்புக்கு: 94440 56727.
••••••••••••••
ஸமஷ்டி சங்கல்ப சேவை
திருவள்ளூர் அருகில் நெய்வேலி கிராமம் சூர்யோதயா நகரில் உள்ள ஸ்ரீ ராகவேந்திர க்ரந்தாலயா என்னும் ப்ரதி ரூப மந்த்ராலயத்தில் "சமஷ்டி சங்கல்ப சேவை' என்னும் வைபவம். மே 11, 12, 13 தேதிகளில் நடைபெறுகின்றது. மேலும், மே 12 -ஆம் தேதி அக்னியின் தாக்கம் குறைந்து, பூமி குளிர்ந்து, மழை வேண்டி வருண சூக்த ஹோமமும் பெரிய அளவில் நடைபெறுகிறது. மேற்படி வைபவங்களில் பக்தர்கள் பங்கேற்று பயனடையலாம். முன்னதாக பதிவு செய்ய வேண்டும். 
தொடர்புக்கு: அம்மன் சத்யநாதன் - 94459 52585 / 98845 52585.
••••••••••••••••
ஸ்ரீ நரசிம்ம ஜயந்தி மகோத்சவம்
தஞ்சை மாவட்டம் தேப்பெருமாள் நல்லூர் கிராமத்தில்
ஸ்ரீ லெக்ஷ்மி நாராயண வரதராஜ பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ நர
சிம்ம ஜயந்தி மகோத்சவம், மே 14 - இல் தொடங்கி 19 வரை நடைபெறுகின்றது. மே 17 -ஆம் தேதி, காலை கருடசேவையும் இரவு பிரகலாத சரித்திரம் நாட்டிய நாடகமும், மே 19 -ஆம் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகின்றது. 
தொடர்புக்கு: 094436 77936.
•••••••••••••••
ஸ்ரீ மஹாஸ்வாமிகள் 126 -ஆவது ஜயந்தி விழா
சென்னை - 92, விருகம்பாக்கம், நடேச நகரில் உள்ள ஸ்ரீ சிவா- விஷ்ணு ஆலயத்தில் மே 19- ஆம் தேதி காஞ்சி ஸ்ரீ மகா சுவாமிகளின் 126 -ஆவது ஜயந்தி சிறப்பு ஹோமங்கள், பூஜைகளுடன் நடைபெறுகின்றது.
••••••••••••••••••
பெருமாள் கோயில் திருப்பணி
காஞ்சிபுரம், பழைய சீவரம் கிராமத்தில் உள்ள பழைமையான ஸ்ரீவைகுண்டநாதப் பெருமாள் ஆலயத்தில் புனருத்தாரண வேலைகள் தொடங்கப்பட உள்ளது. கி.பி.10 -ஆம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழ மன்னர் காலத்தில் நிறுவப்பட்ட திருக்கோயில் என்று கல்வெட்டுக் குறிப்புகள் மூலம் அறியப்படுகிறது. 
தொடர்புக்கு: 98418 29754/ 044-22474518. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com