ஈசனைக் கொன்றைப் பூ சாற்றி வழிபடுவது விசேஷமானது. கொன்றைப் பூவுக்கு ஆறு தளங்கள். பஞ்சாட்சர மந்திரத்துடன் பிரணவத்தையும் சேர்த்தால் ஆறு எழுத்துகள்!
கொன்றை மலருக்கு உள்ள ஆறு தளங்களும் ஆறு அட்சரங்களை உணர்த்துகின்றன. கொன்றை மலர் சாற்றி வழிபடும் பக்தர்களுக்கு தனது திருவடிகளில் இரண்டறக் கலக்கும் சாயுஜ்ய பதவியை அளித்து அருள்கிறார் சிவபெருமான்.
பெருமாள் கோயில்களில் ஸ்ரீசடாரி சாத்துகிறார்கள் என்பது நாம் அறிந்ததே! அதுபோன்று காஞ்சி ஸ்ரீ காமாட்சி கோயிலிலும் தஞ்சாவூர் ஸ்ரீ பங்காரு காமாட்சி கோயிலிலும் சடாரி சாத்தும் வழக்கம் உண்டு.
- ஆர். மகாதேவன்