திருமுறை என்பது மாறாத செல்வம் நல்கும் நூலேயாம்
அதுவே சைவர்களின் வேதமாம்
அவைதானே தோத்திரமாம்
சைவ திருமுறைகள் பன்னிரண்டாம்
திருவைந்தெழுத்தின் பெருமையினையும் விளக்குவதாம்
முதல் மூன்று திருமுறைகள் 4158 பாடல்களாம்
திருஞான சம்பந்தர் அருளியதாம்
4, 5, 6 திருமுறைகள் 3066 பாடல்களாம்
திருநாவுக்கரசர் அருளியதாம்
7-ஆம் திருமுறை 1026 பாடல்களாம்
சுந்தரமூர்த்தி அருளியதாம்
8-ஆம் திருமுறை திருவாசகம் மற்றும் திருக் கோவையாராம்
திருவாசகம் 656 பாடல்களாம்
திருக்கோவையார் 400 பாடல்களாம்
மாணிக்கவாசகர் அருளியதாம்
9-ஆம் திருமுறை திருவிசைப்பா, திருப்பல் லாண்டாம்
301 பாடல்களாம் 10 அடிகளார் அருளியதாம்
10-ஆம் திருமுறை திருமந்திரமாம்
3000 பாடல்களாம் திருமூலர் அருளியதாம்
11-ஆம் திருமுறை 1405 பாடல்களாம்
பட்டினத்தார், காரைக்கால் அம்மையார்
சேரமான் பெருமாள்நாயனார், நம்பியாண்டார் நம்பி ஆகியோர் அடங்கிய 12 அடிகளார் அருளியதாம்
12-ஆம் திருமுறை பெரிய புராணமாம்
4286 பாடல்களாம் சேக்கிழார் அருளியதாம்
பன்னிரு திருமுறைகள் படிப்போம்
சிவன் அருள் பெற்று பேரின்பம் பெறுவோம்.