நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டம், சாக்கை கிராமத்தில் உள்ள அருள்மிகு ஆனந்தவல்லி அம்பிகை சமேத கைலாசநாதர் திருக்கோயிலின் ஜீர்ணோத்தாரன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் பிப்ரவரி 15}ஆம் தேதி, காலை 9 மணி அளவில் நடைபெறுகிறது.
வேதங்களின் உட்பிரிவுகளான சாகைகள் இடைபடாது ஒலித்துக் கொண்டிருந்தபடியால் இவ்வூர் "சாக்கை' எனப் பெயர் பெற்றது. வேதம் ஓதிய அந்தணர்கள் மிகுதியாக வாழ்ந்த தலம் இது. நாளடைவில் பராமரிப்பின்றி பழுதடைந்த நிலையில் இருந்த இச்சிவாலயம் அன்பர்களின் உதவியோடு புதிய சந்நிதிகள் அமைக்கப்பெற்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.
யாகசாலை பூஜை பிப். 13-இல் ஆரம்பமாகிறது. திருத்துறைப்பூண்டி - நாகப்பட்டினம் சாலையில் பாமணிக்கு கிழக்கே சுமார் 6 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.
மேலும் தகவல்களுக்கு: பி.ரமேஷ்: 8508876533 / 9047585438.