கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், மேல்குமாரமங்கலம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர், ஸ்ரீபிரஹந்நாயகி அம்மை சமேத ஸ்ரீரக்ஷôஜாதேஸ்வரர் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நிறைவுற்றதைத் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற மண்டலாபிஷேகமானது மார்ச் 24-ஆம் தேதி நிறைவுறுகிறது. தகவல் தொடர்புக்கு: மேல்குமாரமங்கலம் ஜி.சுந்தரமூர்த்தி சிவாச்சாரியார், மதுரை எம்.கார்த்திகேய சிவாச்சாரியார் - 7708908915 / 8489271544.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், ஆதனூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீஅகத்தீஸ்வரர், ஸ்ரீகல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில்களிலும், ஸ்ரீகோவிந்தராஜப்பெருமாள் ஆலயத்திலும் மகா கும்பாபிஷேகம் மற்றும் சம்ப்ரோஷண வைபவம் மார்ச் 15-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தகவல் தொடர்புக்கு: 9840053289 / 9943515483.