உலக நன்மையை முன்னிட்டு, சேலம், அஸ்தம்பட்டி, மீனாட்சி நகர், டி.வி.எஸ். காலனி, ஸ்ரீசுந்தரவிநாயகர் திருக்கோயிலில், ஸ்ரீவிஸ்வ நாதேஸ்வர சுவாமிக்கு ருத்ர ஏகாதசனீ பெருவிழாவையொட்டி, ஸ்ரீருத்ர பாராயணம், ருத்ர ஹோமம், அபிஷேகம் ஆகிய வைபவங்கள் மார்ச் 26}ஆம் தேதி ஸ்ரீலஸ்ரீ காமாட்சி சுவாமிகள் முன்னிலையில் நடைபெறுகிறது. தொடர்புக்கு: ஸ்ரீலக்ஷ்மி நரசிம்ம பக்த ஜன சபா: 9442191793.
துர்கா சூக்த யாகம்
நாமக்கல் மாவட்டம், கொல்லி மலை அடிவாரத்தில் உள்ள எட்டுக்கை அம்மன் கோயிலில் மார்ச் 27}ஆம் தேதி காலை 7 மணி அளவில் ஸ்ரீதுர்கா சூக்த யாகம், ஸ்ரீதன்வந்திரி யாகங்கள், ஸ்ரீலஸ்ரீ காமாட்சி சுவாமிகள் முன்னிலையில் நடைபெறும். தொடர்புக்கு: 8838911220.
காயத்ரிஜப யக்ஞம்
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா பேட்டை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் மார்ச் 27, 28 }ஆகிய இரு நாள்களிலும் லட்ச மகா காயத்ரி ஜப யக்ஞம் மற்றும் பிரம்மயாகம் நடைபெறுகிறது. தொடர்புக்கு: 9443330203 / 04172}230033.
பங்குனிப் பெருவிழா
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருநாகேஸ்வரம் அருள்மிகு வேங்கடாசலபதி சுவாமி திருக்கோயிலில் பங்குனிப் பெருவிழா மார்ச் 29 }இல் தொடங்கி ஏப்ரல் 9 }ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தொடர்புக்கு: 0435 - 2463385.