இந்த ராசியினருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும்: வாரப் பலன்கள்

இந்த வாரப் (மார்ச் 18-24) பலன்களை ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலன் பெறுங்கள். 
இந்த ராசியினருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும்: வாரப் பலன்கள்

இந்த வாரப் (மார்ச் 18-24) பலன்களை ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலன் பெறுங்கள். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் சற்று குறையும். எதிரிகளை இனம் கண்டு கொள்வீர்கள். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். அண்டை அசலாருடன் பொறுமையாகப் பழகவும். 

உத்யோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். தடைகள் அகலும். மனதில் புதுவிதமான சிந்தனைகளால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வியாபாரிகள்  கூட்டாளிகளை நம்பி தொழிலில் இறங்காதீர்கள். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். விவசாயிகள்சில குத்தகைகளை எடுத்து கடின உழைப்பால் வெற்றி பெறுவீர்கள். கடன்களால் சற்று சேமிப்புகள் கரைந்தாலும், கால்நடைகளால் லாபமடைவீர்கள்.

அரசியல்வாதிகள் மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள்.  கலைத்துறையினர் சக கலைஞர்களை நம்பி நீங்கள் ரகசியங்களை உளறாதீர்கள். மெளனம் காப்பது நல்லது. பெண்மணிகளுக்கு உறவினர்களால் சில கலகங்கள் ஏற்படும். அனைவருடன் ஜாக்கிரதையாகப் பழகுங்கள். மாணவ மணிகளுக்கு  பெற்றோர்களின் ஆதரவு உங்களுக்கு உற்சாகம் தரும். படிப்பில் மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்வது முக்கியம். சக மாணாக்கர்களாலும் உதவி பெற்றிடுவீர்கள்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை துர்க்கையை வழிபடுங்கள். அனுகூலமான தினங்கள்: 18, 19 சந்திராஷ்டமம்:  23, 24

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்களிடையே போதிய விழிப்புடன் இருங்கள். உடல் நலத்தில் அக்கறை காட்டவும். பணம் அதிகமாக வந்தாலும் செலவுகளையும் கட்டுப்படுத்துங்கள். 

உத்யோகஸ்தர்களுக்கு   பணிச்சுமை அதிகரிப்பதால் மன அழுத்தம் ஏற்படும். இருப்பினும் உதவிக்கரம் பெறுவீர்கள் சக ஊழியர்களால். வியாபாரிகள் புதிய முதலீடுகள் செய்வீர்கள். கொடுக்கல் வாங்கல் சாதகமாகவே இருக்கும். விவசாயிகளுக்கு   உற்பத்திப் பொருள்களால் சற்று லாபம் கூடும். அனைத்தும் சுமூகமாகவே முடியும். விவசாயப் பணிகள் தொய்வு இராது.

அரசியல்வாதிகள்  தொண்டர்களை அனுசரித்து வழி நடத்துங்கள். உங்களால் முடிந்த நலத்திட்டங்களுக்கு உதவி புரியுங்கள். கலைத்துறையினருக்கு புதுப்புது ஒப்பந்தங்கள் கிடைக்கும். எதைச் செய்தாலும் பலமுறை நன்கு யோசியுங்கள். பெண்மணிகள் சேமிப்புகளில் கவனம் செலுத்தவும். கணவருடனான அன்யோன்யம் அதிகரிக்கும். குழந்தைகளை சரிவர கவனித்து மேற்பார்வையிடுங்கள். மாணவ மணிகள் கல்வியில் வெற்றி அடைவீர்கள். மேற்படிப்பு சம்பந்தமாக வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்ல ஆயத்தமாவீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் வழிபாடு நலம் தரும். அனுகூலமான தினங்கள்: 19, 20: சந்திராஷ்டமம்: இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3-ம் பாதம் முதல் திருவாதிரை, புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

அனைத்து வாக்குறுதிகளையும், நிதி பரிவர்த்தனைகளையும் யோசித்து கையாளப்பட வேண்டும். எந்த வேலையையும் பிறரிடம் ஒப்படைக்கும்போது நன்கு ஆராய்ந்து விட்டு பிறகு பகிருங்கள்.

உத்யோகஸ்தர்கள் யாரிடமும் மனம் விட்டு பேச வேண்டாம். அலுவலகத்தில் நண்பர்களுடன் சுற்றுப்பயணம் மேற்கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். லாபம் மேம்படும். கூட்டாளிகளினால் ஒத்துழைப்பு கிடைக்கும். விவசாயிகள் விவசாய வேலை ஆட்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். விவேகத்துடன் செயல்படவும். கால்நடை ஜீவனங்களினால் செலவுகள் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகளுக்கு எண்ணிய சில பணிகளில் காலதாமதம் ஏற்படும். தொண்டர்களுடன் மனக்கசப்புகள் குறையும். கலைத்துறையினர் சக கலைஞர்களுடன் நட்பு பாராட்டுவீர்கள். உடலாரோக்கியத்தில் கவனம் தேவை. பெண்மணிகளுக்கு உடன் பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைப்பது அரிதாகும். பொருளாதார நிலை உயரும். மாணவ மணிகளுக்கு வெளிநாடு கல்வி என்பது நனவாகும். அரசு சார்ந்த உதவியும் கிடைக்கும். சக மாணாக்கர்
களின் ஒத்துழைப்பு கிடைக்கும். 

பரிகாரம்: ஸ்ரீ துர்க்கை அம்மன் வழிபாடு உசிதம். அனுகூலமான தினங்கள்: 18, 20 சந்திராஷ்டமம்: இல்லை

கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த பணிகள் நிறைவேறும். வெளியூர் பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். சுபகாரிய நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும்.

உத்யோகஸ்தர்களுக்கு  திறமைகள் வெளிப்படும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரிகளுக்கு தொழில்ரீதியாக பயணங்களால் நன்மை உண்டாகும். தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டிய காலமாகும். புதிய முதலீடு சார்ந்த விஷயங்களில் விவேகம் வேண்டும். விவசாயிகள் நண்பர்களின் ஒத்துழைப்புடன் பழைய கடன்களை அடைத்துவிடுவீர்கள். விவசாயி விளைச்சலில் இருந்த மந்தத்தன்மை குறையும்.

அரசியல்வாதிகளுக்கு அரசு தொடர்பான பணிகளில் சிக்கல்கள் ஏதும் இராது. சில பணிகளில் சற்று காலதாமதம் ஏற்படும். கலைத்துறையினருக்கு பலதரப்பட்ட மக்களின் அறிமுகமும், ஆதரவும் கிடைக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். பெண்மணிகளுக்கு வெளியூர் பயணங்களால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். மாணவ மணிகள் படிப்பில் கவனம் தீவிரமாக செலுத்துங்கள்.

பரிகாரம்: திங்கள்கிழமை சிவ - பார்வதியை வழிபடவும். அனுகூலமான தினங்கள்: 20, 21 : சந்திராஷ்டமம்: இல்லை.

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

குடும்ப உறுப்பினர்களை பற்றிய புரிதல் மேம்படும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதளவில் மாற்றம் ஏற்படும். ஆடம்பர செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். பொருளாதார வளர்ச்சி காண்பீர்கள்.

உத்யோகஸ்தர்களுக்கு சக ஊழியர்கள்  பாராமுகமாகவே நடந்து கொள்வார்கள்.  வேலைகளை நீங்களாகவே தன்னிச்சையாக முடித்துக் கொள்வீர்கள். வியாபாரிகள் அவசியமான பொருள்களை மட்டும் வியாபாரம் செய்யவும். கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் நன்றாகவே இருக்கும். விவசாயிகளுக்கு கால்நடை பராமரிப்புச் செலவுகள் கூடுமாகையால் கவனமாக இருக்கவும். அகலக்கால் வைக்காதீர்கள். 

அரசியல்வாதிகள் மேலிடத்தின் நேரடிப் பார்வையில் இருப்பதால் எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செய்யுங்கள்.  கலைத்துறையினர் உடல் ஆரோக்கியத்தில் கவனம்  செலுத்தவும். பெண்மணிகளுக்கு கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வரவுக்கு ஏற்ப செலவு உண்டாகும்.  மாணவ மணிகளுக்கு எண்ணங்களில் மாற்றம் உண்டாகும். உணவு சார்ந்த விஷயங்களில் கவனம் கொள்ளவும்.

பரிகாரம்: புதனன்று பெருமாள் - தாயாரை வணங்கி வரவும். அனுகூலமான தினங்கள்: 18, 21. சந்திராஷ்டமம்: இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

மனதில் புதுவிதமான லட்சியங்களை உருவாக்குவீர்கள். சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் சற்று மனக்குழப்பமடைவீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும்.

உத்யோகஸ்தர்கள் சிலருக்கு வேலைப் பிரிவில் மாற்றம் ஏற்படும். வருமானம் திருப்தியாகவே வரும்.  வியாபாரிகள் பழைய பாக்கிகள் வசூலாகி பொருளாதார மேம்பாடு அடைவீர்கள். உடல் உழைப்புக்கு இருமடங்கு லாபம் பெறுவீர்கள். விவசாயிகள் முக்கியத் திருப்பங்களைச் சந்திப்பீர்கள். கால்நடைகளினால் லாபம் பெருகும்.

அரசியல்வாதிகள் தொண்டர்களை அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். அந்தஸ்து உயரும். புதிய பொறுப்புகளுக்குத் தலைமை வகிப்பீர்கள். கலைத்துறையினருக்கு மனதிற்கினிய ஒப்பந்தங்களால் மனம் மகிழ்ச்சி பெறும். தற்போது செய்யும் சிறு முயற்சிகளும் நிறைய நற்பலன்களைத் தரும். பெண்மணிகளுக்கு குடும்பத்தாருடன் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். உறவினர்களிடையே விரிசல் ஏற்படலாம். மாணவ மணிகள் பெற்றோர்களால் ஆசிர்வாதிக்கப்படுவீர்கள். வெளிநாடு சென்று கல்வி பயில எடுக்கும் முயற்சியும் வெற்றி தரும்.

பரிகாரம்: சனீஸ்வரரை வணங்குங்கள். அனுகூலமான தினங்கள்: 19, 22. சந்திராஷ்டமம்: இல்லை. 

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் குதூகலம் நிறையும். தொழிலில் மேன்மை தென்படும். உடலாரோக்கியம் பலப்படும். உறவினர்களால் இல்லம் நிறைந்து மகிழ்ச்சியாக திளைப்பீர்கள். வீடு மாற்றம் தற்போது தள்ளி வைப்பது நல்லது.

உத்யோகஸ்தர்கள் சக ஊழியர்களால் உதவியால் கடினமான பணிகளையும் சுறுசுறுப்புடன் செய்து முடித்து விடுவீர்கள். வியாபாரிகள் காலதாமதத்தினால் சற்று சறுக்கல்களைச் சந்திப்பீர்கள். வெற்றி பெற கடின உழைப்பைக் கூட்டிக் கொள்வது சிறந்தது. விவசாயிகள் மாற்றுப் பயிர்களால் விளைச்சல் காண்பீர்கள். புதுப்புது குத்தகை நிலங்களால் நல்ல மகசூல் லாபம் காண்பீர்கள். 

அரசியல்வாதிகள் மேலிடத்தின் கெடுபிடிகளை சந்திப்பீர்கள். எவரிடமும் ரகசிங்களைக் கொட்டாதீர்கள். கலைத்துறையினர் எதிர்பார்த்த வெற்றி இலக்கை அடைவீர்கள். ரசிகர்களிடம் அன்பு பாராட்டுங்கள். அவர்களுக்கு தேவையான நலத்திட்டங்களையும் செயல்படுத்துங்கள். பெண்மணிகளுக்கு பண வரவும் அதிகரிக்கும். கணவரிடமும் கணவர் வீட்டாரிடமும் ஒற்றுமையும் அதிகரிக்கும். மற்றவர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். மாணவ மணிகள்   படிப்பில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். பாடங்களை திரும்பத் திரும்ப படிப்பது நல்லது.

பரிகாரம்: பிரதோஷ நந்தீஸ்வரரை வணங்குங்கள்.  அனுகூலமான தினங்கள்: 21, 22. சந்திராஷ்டமம்: இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

கடின உழைப்பிற்குப் பிறகே வெற்றி வாய்ப்புகள் தேடி வரும். நீண்டகால எண்ணங்கள் நிறைவேறும். உறவினர்களினால் சற்று கலகங்கள் ஏற்படும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். என்றாலும் வருமானம் குறையாது.

உத்யோகஸ்தர்கள் சிறு சிறு தொல்லைகளால் மனம் கலங்குவீர்கள். மேலதிகாரிகள் நட்புடன் நடந்து கொள்வார்கள். வியாபாரிகள் உழைப்பிற்குத் தக்கவாறு பலன் பெறுவீர்கள். திருப்திகரமாக இருப்பார்கள். விவசாயிகள் கடும் போட்டிகளைச் சந்திப்பீர்கள். விவசாய கூலி ஆட்களை கொண்டு அனைத்தையும் சமாளித்து திருப்திகரமாக உலா வருவீர்கள்.

அரசியல்வாதிகள் எதிரிகளை இனம் கண்டு ஒதுக்குவீர்கள். உங்களது செயல்திறன் அதிகரிக்கும். தொண்டர்களுக்காக பல நல்ல நலத்திட்டங்களைப் புரிவீர்கள். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் சுமாராகவே இருக்கும். எனினும் புகழைத் தக்கவைத்துக் கொள்வார்கள். பெண்மணிகளுக்கு உறவினர்களிடையே பாசம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். மாணவ மணிகள் பாடங்களை தொடர்ந்து படித்து புரிந்து கொள்வீர்கள். உடற்பயிற்சியைத் தொடர்ந்து செய்வீர்கள்.

பரிகாரம்: செந்திலாண்டவரை வழிபடவும். அனுகூலமான தினங்கள்:- 18, 22. சந்திராஷ்டமம்: இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமாக இருக்கும். தந்தை வழி உறவில் சிறு சலசலப்பு உண்டாகி மறையும். சிக்கனத்தைக் கடைப்பிடிக்கவும். உங்கள் எண்ணங்களில் தெளிவு பிறக்கும். செயல்களில் தர்ம சிந்தனைகள் மேலோங்கும்.

உத்யோகஸ்தர்கள் சக ஊழியர்களின் மனதில் இடம் பிடித்துவிடுவீர்கள்.  கடுமையாக உழைப்பது வெற்றி தரும். வியாபாரிகள்: புதுப்புது முயற்சிகளை மேற்கொண்டு லாபமடைவீர்கள். வரவுகள் வந்தாலும் செலவுகளும் அதிகமாகும். விவசாயிகளுக்கு கால்நடைகளுக்கான தீவனங்கள் செலவு அதிகரிக்கும். விளைச்சல் பெருகி, லாபம் உயரக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகள் கடன்களை வாங்கி செலவு செய்யாதீர்கள். மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள்.கலைத்துறையினர் சக கலைஞர்களின் அன்புக்கு அடிபணிவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையொப்பம் இடுவீர்கள். பெண்மணிகள் கணவரை அனுசரித்துச் செல்லுங்கள். குழந்தைகளாலும் செலவுகள் கூடும். மாணவ மணிகள் படிப்பில் தீவிர கவனம் செலுத்துங்கள். ஆத்ம ஞானம் பெருக யோகா, ப்ராணாயாமம் போன்றவற்றில் கவனம் செலுத்துவது உத்தமம்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வணங்குங்கள். அனுகூலமான தினங்கள்: 21, 24. சந்திராஷ்டமம்: இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)


குடும்பத்தினரிடம் அன்பு, பாசத்தோடு பழகுவீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகள் நடந்தேறும். எதிர்வரும் இடையூறுகளை சமாளிப்பீர்கள்.  சிலருக்கு வாகனம் வாங்கும் ப்ராப்தம் கிட்டும்.

உத்யோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் சந்தோஷமாக ஈடுபடுவீர்கள். மேலதிகாரிகளிடம் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். வியாபாரிகள் வளர்ச்சி அடைவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். விவசாயிகள் கால்நடைகளை கவனத்துடன் பராமரிக்கவும், முயற்சிகளைத் தீவிரப்படுத்தி வருமானத்தைப் பெருக்கவும்.

அரசியல்வாதிகளுக்கு  தொண்டர்களின் ஆதரவும் அன்பும் அமோகமாக இருக்கும். மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.  கலைத்துறையினருக்கு சில ஒப்பந்தங்கள் தள்ளிப்போகும்.  சேமிப்பில் அதிக கவனம் செலுத்தினால் சமாளித்து விடுவீர்கள். பெண்மணிகள்  வீண் குழப்பங்களைத் தவிர்த்துவிடுங்கள். குழந்தைகளால் மகிழ்ச்சிஅடைவீர்கள். மாணவ மணிகளின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறும். இருப்பினும் நீண்டகாலத்  திட்டங்களை சரிவர நிறைவேற்ற கடுமையாக உழைக்கவும்.

பரிகாரம்: அனுமனை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 23, 24. சந்திராஷ்டமம்: இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)


சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயர, தக்க வைத்துக்கொள்ள மிகவும் பாடுபடுவீர்கள். குடும்பம் குழப்பத்துக்கிடையே வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கும். பணவரவு சீராக இராது. கடும் முயற்சியினால் வெற்றியைத் தேடுவீர்கள். நண்பர்களால் உதவி பெறுவீர்கள். கணவன் - மனைவியிடையே சிறிது அனுசரித்துச் செல்லுங்கள்.

உத்யோகஸ்தர்கள் வேலைகளில் குறைகூறக் காத்திருக்கும் மேலதிகாரிகளிடம் கவனமாக இருக்கவும்.  வியாபாரிகள்  அகலக்கால் வைக்காமல் வியாபாரத்தை நடத்துங்கள். புதிய சந்தைகளை நாடிச் சென்றும் வியாபாரம் செய்வீர்கள். விவசாயிகள்  கால்நடைகளுக்குச் சிறிது செலவு செய்ய நேரிடும். நீர்வரத்து அதிகமாகி மகசூல் பெருகும்.

அரசியல்வாதிகள்  எதிரிகளும் நண்பர்களாவார்கள். அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும்.  கலைத்துறையினர்  ரசிகர்களின் ஆதரவோடு வெற்றிநடை போடுவீர்கள். புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். பெண்மணிகள் கணவரிடம் வீண் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் அனுசரித்துச் செல்வது நல்லது. விட்டுக் கொடுத்தால் கெட்டுப்போக மாட்டோம். மாணவ மணிகள் சோம்பேறித்தனத்தை விட்டுவிட்டு சுறுசுறுப்பாக அதிகாலையில் எழுந்து பாடங்களை மனப்பாடம் செய்யுங்கள்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை துர்க்கையை வழிபடவும். அனுகூலமான தினங்கள்: 20, 23. சந்திராஷ்டமம்: 18, 19

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப செயல்களை மாற்றியமைத்து வெற்றி அடைவீர்கள். பொருளாதாரம் சீராக இருக்கும். சந்தோஷத்திற்கு குறைவு வராது. குடும்பத்தில் மதிப்பு, மரியாதை சீராகவே இருக்கும்.

உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகள் சற்று கடுமையாக நடந்து கொள்வார்கள். எனவே பணிகளை விரைவாக முடிக்க கடுமையாக உழைக்கவும். வியாபாரிகள் போட்டிகளைச் சமாளித்து வியாபாரத்தை சிறப்புடன் நடத்துவீர்கள். எதிர்பார்த்ததைவிட அதிக லாபமடைவீர்கள். விவசாயிகள் புதிய உபகரணங்களை வாங்கி விவசாயத்தை சிறப்புடன் செய்வீர்கள். விளைச்சலும் அமோகமாகி லாபம் பெருகும்.

அரசியல்வாதிகள்  கட்சிப் பிரசாரங்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். சமூகத்தில் மதிப்பு, மரியாதைகள் உயரும். கலைத்துறையினரின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். பெண்மணிகள் கணவருடனும் குடும்பத்தாருடனும் சற்று நல்லுறவைக் காண்பார்கள். பூர்வபுண்ணிய பலத்தால் தடைகள் அனைத்தும் விலகும். மாணவ மணிகள் கல்வியில் சுறுசுறுப்புடன் ஈடுபட்டு மதிப்பெண்களை அள்ளுவீர்கள்.

பரிகாரம்: விஷ்ணுவை வழிபடுங்கள். அனுகூலமான தினங்கள்: 19, 24. சந்திராஷ்டமம்: 20, 21, 22

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com