துபாய்: திருமணமான புதிதில், கடலில் நீந்தச் சென்ற போது, தனது மனைவியை மேக்கப் இல்லாமல் பார்த்து அதிர்ந்து போன கணவர், நீதிமன்றத்தை நாடி விவாகரத்தும் பெற்றுவிட்டார்.
துபாயைச் சேர்ந்த 34 வயது நபர், 28 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவர் ஷார்ஜாவில் உள்ள அல் மம்ஸார் கடற்கரையில் நீந்தச் சென்றபோது, அவரது மனைவியின் முழு மேக்கப்பும் கலைந்து, அவர் யார் என்று அடையாளம் தெரியாத அளவுக்கு உருமாறிப் போயிருந்ததைப் பார்த்து அதிர்ந்து போனார்.
உடனடியாக நீதிமன்றத்தில் விவகாரத்து கோரிப் பெற்றுவிட்டார்.
மணப்பெண் அளவுக்கு அதிகமாக மேக்கப்பில் இருந்துள்ளார். அவரது கண் இமைகள் கூட உண்மையில்லை. அவையும் ஒட்ட வைக்கப்பட்டிருந்தது. அழகுக்காக பல அறுவை சிகிச்சைகளையும் செய்துள்ளார் என்று கணவர் குற்றம்சாட்டியுள்ளார்.