பிலிப்பின்ஸில் பெய்து வரும் கன மழை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 200-ஆக உயர்ந்தது.
அந்த நாட்டைத் தாக்கிய "டெம்பின்' புயல் காரணமாக, வெள்ளிக்கிழமை முதல் பெய்து வரும் கனமழையில், பிலிப்பின்ஸின் இரண்டாவது பெரிய தீவான மிண்டானாவ் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதில் சனிக்கிழமை வரை 182 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட பிறகு மேலும் சில உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200-ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மேலும் 144 பேரைத் தேடி வருவதாக அவர்கள் கூறினர்.