பிரிட்டன் - சவூதி அரேபியா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக சவூதி அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. வளைகுடாவில் சவூதியின் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வரும் கத்தாருடன் இதே போன்ற ஒரு ஒப்பந்தத்தை பிரிட்டன் மேற்கொண்டுள்ள நிலையில், மன்னர் சல்மானுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் ஜெட்டா நகரில் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.