தைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

இத்தாலியின் சிசிலி தீவில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்: எட்னா எரிமலை வெடிப்பு!

இத்தாலியின் தெற்கு பகுதியில் உள்ள சிசிலி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து மவுண்ட் எட்னா எரிமலை வெடிக்கத் தொடங்கி உள்ளது.

News image
Updated On :25 டிசம்பர் 2018, 2:31 pm IST


இத்தாலியின் தெற்கு பகுதியில் உள்ள சிசிலி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து மவுண்ட் எட்னா எரிமலை வெடிக்கத் தொடங்கி உள்ளது.

ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா இத்தாலியின் சிசிலி தீவில் அமைந்துள்ளது. 

இந்நிலையில், நேற்று திங்கள்கிழமை அங்கு ரிக்டர் அளவுகோலில் 3.3 என்ற அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து எட்னா எரிமலை வெடிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகைமண்டலம் சூழ்ந்துள்ளது.

எரிமலை வெடிப்பை தொடர்ந்து சிசிலி தீவில் உள்ள கட்டானியா நகரம் முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்ததை அடுத்து விமான நிலையம் திங்கள்கிழமை(டிச.24) மூடப்படுவதாக விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே எட்னா எரிமலை வெடிப்பு அடிக்கடி ஏற்படுவதாகவும், கடந்த சில மாதங்களாக எரிமலை வெடிப்பு படிப்படியாக அதிகரித்து வருவதாக இத்தாலி தேசிய புவியியல் மற்றும் எரிமலைக் கழக ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த முதற்கட்ட தகவல் ஏதும் இல்லை. 

கடந்த சனிக்கிழமையன்று சுமத்ரா மற்றும் ஜாவா தீவுகளில் உள்ள கடலோர நகரங்களில் கடலடி எரிமலை வெடிப்புக்கு பிறகு ஏற்பட்ட சுனாமியால் இறந்தவர்கள் எண்ணிக்கை 373 உயர்ந்துள்ள நிலையில், இத்தாலியின் சிசிலி தீவில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் மற்றும் எட்னா எரிமலை வெடிப்பு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.