ஃபுளோரிடா மாகாண தேர்தலில் இந்திய-அமெரிக்கரான சஞ்சய் பாட்டீல் வேட்பாளர் போட்டியில் பங்கேற்க போவதாக அறிவித்துள்ளார்.
ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள சாட்டிலைட் பீச் பகுதியில் வசித்து வருபவர் சஞ்சய் பாட்டீல். இந்திய-அமெரிக்கரான இவர் அந்த மாகாணத்தில் நடைபெறவுள்ள எம்.பி.க்கான வேட்பாளர் போட்டியில் பங்கேற்கப் போவதாக அறிவித்துள்ளார். குடியரசுக் கட்சியின் தற்போதைய எம்.பி.யான பில் போúஸவை எதிர்த்து இவர் களமிறங்கவுள்ளார்.
இதுகுறித்து பாட்டீல் தேர்தல் வலைதளத்தில் கூறியுள்ளதாவது: சமூக நீதியின் ஒரு அங்கமான பொருளாதார நீதி அனைவருக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நான் தேர்ந்தெடுக்கப்பட்டால், இங்குள்ள மக்கள் அனைவரின் தேவையையும் உறுதியாக நிறைவேற்றுவேன். பெரிய நிறுவனங்கள் அனைத்தும் தங்களுடைய பணியாளர்களுக்கு தகுந்த ஊதியத்தை வழங்கும் கொள்கைகளை வகுப்பதற்கு தேவையான ஆதரவை நல்குவேன். அனைவருக்கும் அத்தியாவசிய தேவையான மருத்து காப்பீட்டை அளித்து, நமது நிலம், நீர், காற்று ஆகியவற்றை பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன் என்று தேர்தல் வலைதளத்தில் அவர் தெரிவித்துள்ளார்.