உலகம்
மொஸாம்பிக்: குப்பைக் கிடங்கு சரிந்து 17 பேர் பலி
தென்கிழக்கு ஆசிய நாடான மொஸாம்பிக்கில், தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக மிகப் பெரிய குப்பைக் கிடங்கு சரிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்தனர்.
தென்கிழக்கு ஆசிய நாடான மொஸாம்பிக்கில், தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக மிகப் பெரிய குப்பைக் கிடங்கு சரிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்தனர்.
அந்த நாட்டின் மாபுடோ நகரையொட்டிய ஏழைகள் வசிக்கும் ஹுலேனே புறநகர் பகுதியில், 3 அடுக்குக் கட்டடம் உயரத்துக்கு குப்பைகள் கொட்டப்பட்டிருந்ததாகவும், மழை காரணமாக அது மக்கள் வசிக்கும் பகுதியில் சரிந்து விழுந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாபுடோ நகரின் மிகப் பெரிய குப்பைக் கிடங்கான ஹுலேனைவில், குப்பையில் கிடைக்கும் உணவுப் பொருள்களையும், விற்பனைக்கான பழைய பொருள்களையும் சேகரிப்பதற்காக ஏழை மக்கள் அங்கு தங்கியுள்ள நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.