தாய்லாந்தில் வாடகைத் தாய்கள் மூலம் பெற்ற 13 குழந்தைகளையும் வளர்க்க, ஜப்பானியருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஜப்பானைச் சேர்ந்த பெரும் செல்வந்தரான மிட்சுடோகி (28), தனது சொத்துகளை அனுபவிப்பதற்காக ஏராளமான குழந்தைகளைப் பெற விரும்பியதாகவும், அதன் காரணமாக தாய்லாந்துக்கு வந்து 13 வாடகைத் தாய்கள் மூலம் தனது குழந்தைகளைப் பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், ஒரே நேரத்தில் இத்தனை குழந்தைகளைப் பெற்றுச் செல்வதற்கு தன்னார்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது தொடர்பாகத் தொடுக்கப்பட்ட வழக்கிலேயே நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது.