உலகம்
மனித உரிமை மீறல்: வட கொரியாவுக்கு ஐ.நா. கண்டனம்
வடகொரியாவில் அதிகரித்து வரும் மனித உரிமை மீறல் சம்பவங்களுக்கு ஐ.நா. பொது சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
வடகொரியாவில் அதிகரித்து வரும் மனித உரிமை மீறல் சம்பவங்களுக்கு ஐ.நா. பொது சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த சபை மேலும் கூறியுள்ளதாவது: சுமார் 1 கோடி வட கொரியர்கள் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அந்த நாடு அணு ஆயுதங்களை தயாரிப்பதிலும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை உருவாக்குவதிலும் ஈடுபட்டு வருகிறது. மக்கள் பயன்பெற வேண்டிய திட்டங்களுக்கான நிதியை அந்த நாடு இதற்காகவே செலவிட்டு வருகிறது. இது மிகவும் கண்டனத்துக்குரியது என ஐ.நா. தெரிவித்துள்ளது.