இரண்டாம் உலகப் போர் முடிவுற்றதற்கு பிறகு ஜப்பான் முதல் முறையாக விமானம் தாங்கி கப்பல்களையும், போர் விமானங்களையும் கொள்முதல் செய்யவுள்ளது.
சீனா ராணுவ பலத்தை அதிகரித்து வருவது ஜப்பானுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, ஜப்பான் பிரதமர் ஷின்úஸா அபே ஐந்தாண்டுக்கான புதிய ராணுவ கொள்கையை உருவாக்கியுள்ளார். அதில், விமானம் தாங்கி கப்பல்களை வாங்கவும், போர் விமானங்களை கொள்முதல் செய்யவும் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது.