புதிய பிஎம்டபிள்யூ காரை சவப்பெட்டியாக்கி தந்தையை புதைத்த அன்புமகன்

சில்வர் நிற புதிய பிஎம்டபிள்யூ காரை, பெரிய குழி தோண்டி புதைக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
புதிய பிஎம்டபிள்யூ காரை சவப்பெட்டியாக்கி தந்தையை புதைத்த அன்புமகன்


சில்வர் நிற புதிய பிஎம்டபிள்யூ காரை, பெரிய குழி தோண்டி புதைக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

புகைப்படம் குறித்து விசாரித்ததில், அதிர்ச்சியும், ஆச்சரியமும் கலந்த தகவல் கிடைத்துள்ளது.

அதாவது, நைஜீரியாவைச் சேர்ந்த அஸுபுகெ தனது உடல் நலம் குன்றிய தந்தைக்கு ஒரு வாக்குறுதியை அளித்திருந்தார். அதில், அவரது இறுதிச்சடங்கின் போது, விலை உயர்ந்த ஆடம்பரக் காரை சவப்பெட்டியாக்கி, அதில் தந்தையின் உடலை புதைப்பதுதான்.

தனது இறுதி மூச்சை விட்ட தந்தையின் உடலை, வாக்குறுதி அளித்தபடி, புதிய பிஎம்டபிள்யூ கார் வாங்கி அதில் வைத்து, அதற்கேற்ற அளவுக்கு குழி தோண்டி அதில் புதைத்துள்ளார்  அஸுபுகே. 

தனது தந்தை சொர்க்கத்துக்கு காரிலேயே செல்ல வேண்டும் என்பதற்காக மகன் செய்த இந்த செயலுக்கு இரு விதமான கருத்துக்கள் சமூக தளங்களில் பரவி வருகிறது.

தனது தந்தையின் மீதான அதீத பாசத்தையே இது காட்டுவதாக ஒரு தரப்பினர் புகழ்ந்தாலும், பணத்தை நல்ல முறையில் செலவிடலாம். ஒரு உயர்ந்த ரக சவப்பெட்டியை தயாரித்து அதில் தந்தையின் உடலை புதைக்கலாம். இது வெறும் ஆடம்பரத்துக்காகவே செய்யப்பட்டது என்று சிலர் எதிர்மறை கருத்துகளையும் பதிவிட்டுள்ளனர்.

பழங்காலத்தில், மன்னர்கள் இறக்கும் போது, அவர்களது பணியாளர்களும், மன்னர்கள் பயன்படுத்திய பொருட்களும் சேர்த்து புதைக்கப்படுவது வழக்கம் என்ற விஷயம்தான் தற்போது நினைவில் வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com