தேசத் துரோக வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரஃப் (75) சிறப்பு நீதிமன்றத்தில் மே 2-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2014-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் முஷாரஃப் மீது தேசத் துரோக வழக்கு பதியப்பட்டது. இதையடுத்து அவர், மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக கடந்த 2016-ஆம் ஆண்டு துபை சென்றார். ஆதன்பிறகு அவர் பாகிஸ்தான் திரும்பவில்லை.