வெனிசூலா அதிபர் ரேஷன் முறையில் மின்சாரத்தை பங்கிட்டு கொடுக்கும் திட்டத்தை ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். வெனிசூலாவில் கடுமையான மின்சார பற்றாக்குறை ஏற்பட்டுள்ள இந்த சமயத்தில் அதிபர் இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
இருப்பினும், மின்சாரத்தை பங்கிட்டு வழங்கும் இந்த 30 நாள் திட்டம் எப்படி செயல்படுத்தப்போகிறது என்பது குறித்த தெளிவான விளக்கத்தை அவர் அளிக்கவில்லை. மின்சாரத்தை அடுத்து தண்ணீர் தேவையையும் பூர்த்தி செய்து தருவதாக மக்களுக்கு அவர் உறுதியளித்துள்ளார்.