அமெரிக்கா, 2019ஆம் ஆண்டு உய்கூர் மனித உரிமை கொள்கை பற்றிய சட்ட முன்வரைவைச் சட்டமாக அங்கீகரித்து சீனாவின் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் தீவிரவாத ஒழிப்பு முயற்சி மீது அவதூறு பரப்பியுள்ளது. அதோடு, சீன அரசின் சின்ஜியாங் கொள்கை மீது பழி தூற்றியுள்ள அமெரிக்கா, சர்வதேச சட்டத்தையும் சர்வதேச உறவின் அடிப்படைக் கோட்பாட்டையும் கடுமையாக மீறியுள்ளது.
பயங்கரவாத எதிர்ப்பு பிரச்னையில் அமெரிக்காவின் இரட்டை வரையறையையும், மனித உரிமையை ஒரு காரணமாகக் கொண்டு சீனாவின் உள் விவகாரங்களில் தலையிடுவதையும் இது கோடிட்டுக்காட்டியது. வன்முறை சக்திகளுக்கு தவறான சமிக்கையை வழங்கியுள்ளது. இதற்குச் சீனாவும் சர்வதேச சமூகமும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
தகவல்:சீன ஊடகக் குழுமம்