அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு இந்தியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பிப்ரவரி 14-ஆம் தேதி பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகம்மது பயங்கரவாத அமைப்பால் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் 44 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர். இது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 50-க்கும் மேற்பட்ட உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்க வாழ் இந்தியர்கள் பாகிஸ்தான் எதிராக நியூயார்க் நகரில் உள்ள அந்நாட்டின் பாகிஸ்தான் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கு திரளாக கூடியிருந்த இந்தியர்கள், உலக பயங்கரவாத பாகிஸ்தான், லஷ்கர்-இ-தொய்பா பாகிஸ்தான், 9/11 பாகிஸ்தான், 26/11 பாகிஸ்தான், ஒஸாமா பின்லேடன் பாகிஸ்தான் போன்ற கோஷங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் முழக்கமிட்டனர்.