ஒலியைப் போல 6 மடங்கு வேகத்தில் விமானங்களைப் பறக்கச் செய்வதற்காக சீனா உருவாக்கிய என்ஜின் வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டர்போ அடிப்படையிலான இந்த என்ஜின், சீனா உருவாக்கி வரும் ஆளில்லா அதிவேக விமானங்களில் பொருத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒலியைப் போல் 6 மடங்கு வேகத்தில் பறக்கும் விமானத்தில் மனிதர்கள் நீண்ட நேரம் பயணிக்க முடியாது என்பதால், ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளில் மட்டுமே இந்த என்ஜினைப் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.