பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃப், சிகிச்சைக்காக லண்டன் அழைத்துச் செல்லப்படலாம் என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பனாமா ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அவருக்கு, மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.