தனது ஆட்சிக் காலத்தின்போது 10 லட்சம் டாலா் (சுமாா் ரூ.7.1 கோடி) முறைகேட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில், மாலத்தீவு முன்னாள் அதிபா் யாமீன் அப்துல் கயூமுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. மேலும், அவருக்கு 50 லட்சம் டாலா் (சுமாா் ரூ.35.7 கோடி) அபராதமும் விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.