2019 அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2019-ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோபிய பிரதமர் அபி அகமது அலிக்கு வழங்கப்படுகிறது. 
2019 அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

ஒவ்வொரு வருடமும் இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவமும் உடலியங்கியலும், அமைதி, பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் மகத்தான சாதனை புரிந்தவர்களைக் கௌரவிக்கும் பொருட்டு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. 

அவ்வகையில், 2019-ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோபிய பிரதமர் அபி அகமது அலிக்கு வழங்கப்படுகிறது. சர்வதேச நாடுகளுக்கு இடையே அமைதியை நிலைநாட்டும் விதமாக எடுத்துவரும் முயற்சிகளை கௌரவிக்கும் விதமாக அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

குறிப்பாக அண்டை நாடான எரிட்ரியா உடனான எல்லைப் பிரச்னை மற்றும் நட்புறவில் அதிக கவனம் செலுத்தி வருவதால் அபி அகமது அலி, கௌரவிக்கப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com