பிலிபைன்ஸின் தெற்குப் பகுதியில் செவ்வாய்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.6-ஆகப் பதிவானது. இதில் பள்ளிச்சிறுவன் ஒருவன் உயிரிழந்தான்.
சுமார் ஒரு நிமிடத்துக்கும் மேலாக நீடித்த இந்த கடுமையான நிலடுக்கத்தில் பெரும்பாலான கட்டடங்களில் சேதம் ஏற்பட்டது. வணிக, பள்ளிகள் மற்றும் அலுவலகக் கட்டடங்கள் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பள்ளிக்கட்டடம் ஒன்று சரிந்த விபத்தில் சிக்கி தப்பி வெளியேற முயற்சித்த சிறுவன் ஒருவன் உயிரிழந்தான்.
மேலும் பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அங்கு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
முன்னதாக இதே பகுதியில் ஏற்பட்ட நிலடுக்கத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். பல நூறு பேர் பாதிப்புக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.