ஆஸ்திரிய நாடாளுமன்றத்துக்கு ஞாயிற்றுக்கிழமை முன்கூட்டியே தேர்தல் நடைபெற்றது. அந்த நாட்டில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்குப் பின் செபாஸ்டியன் கர்ஸ் தலைமையில் அமைந்த அரசு, கூட்டணி முறிவால் கவிழந்ததைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் ஆட்சிக் காலம் நிறைவடைவதற்கு முன்னரே இந்தத் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்தத் தேர்தலிலும் செபாஸ்டியன் கர்úஸ வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.