கார் விபத்து: பிரிட்டன் உளவுத்துறை தலைவரின் மகன் சாவு

பிரிட்டன் உளவுத்துறை தலைவரின் மகன், கார் விபத்தில் பலியாகியுள்ளார்.
கார் விபத்து: பிரிட்டன் உளவுத்துறை தலைவரின் மகன் சாவு


பிரிட்டன் உளவுத்துறை தலைவரின் மகன், கார் விபத்தில் பலியாகியுள்ளார்.
பிரிட்டனின் எம்.ஐ.6 உளவுத்துறை தலைவராக இருப்பவர் அலெக்ஸ் யங்கர். இவரது மகனான சாம் யங்கர் (22), ஸ்டெர்லிங்ஷைரில் சனிக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் பலியானார்.
கார் எப்படி விபத்தில் சிக்கியது என்பது தெரியவில்லை. இருப்பினும், விபத்துக்கு சந்தேகப்படும்படியான காரணம் இருப்பதாக தெரியவில்லை என்று பிரிட்டன் காவல்துறை தெரிவித்துள்ளது.
உலகின் சக்திவாய்ந்த உளவு அமைப்புகளில் பிரிட்டனின் எம்.ஐ.6ம் ஒன்று. இதன் தலைவராக 2014ஆம் ஆண்டு முதல் அலெக்ஸ் யங்கர் பதவி வகித்து வருகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com