இலங்கை நட்சத்திர விடுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் இந்தியாவைச் சேர்ந்த 5 ஆக உயரிழந்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
அவர்களில், லோகாஷினி, நாராயண் சந்திரசேகர், ரமேஷ் ஆகிய 3 பேர் பலியாக உள்ளதாக கொழும்பில் இள்ள இந்தியத் தூதரகம் உறுதி செய்திருந்தது.
இந்நிலையில், கே.ஜி. ஹனுமந்தராயப்பா, எம்.ரங்கப்பா எனும் 2 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாக உள்ளது.
இதையடுத்து இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இதனை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதி செய்துள்ளார்.
குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 13 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.