கொழும்பு: இலங்கை தலைநகர் கொழும்புவில் மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொழும்புவில் வெள்ளவத்தை என்ற இடத்தில் உள்ள சவாய் திரையரங்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ருவான் இன்று தெரிவித்தார்.
செய்தியாளர்களை சந்தித்த ருவான், இலங்கையில் செயல்படும் பயங்கரவாத அமைப்பு இரண்டு குழுக்களாக பிரிந்து பயங்கரவாதிகள் செயல்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வெள்ளவத்தையில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அந்த மோட்டார் சைக்கிளைத் திறந்து பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு வர முயற்சித்தனர். ஆனால் மோட்டார் சைக்கிளைத் திறக்க முடியாததால் அவ்விடத்திலேயே வெடிகுண்டை நிபுணர்கள் பாதுகாப்பாக வெடிக்க வைத்தனர்.
இலங்கை குண்டுவெடிப்பில் 359 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 39 பேர் வெளிநாட்டினர். இவர்களில் 17 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தொடர் குண்டு வெடிப்புக்குத் தலைமை தாங்கி நடத்திய பயங்கரவாதியும், தற்கொலைப் படைத் தாக்குதலில் பலியாகியிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அமைச்சர் ருவான் விஜேவர்தனே தெரிவித்துள்ளார்.