இலங்கை தாக்குதல் எதிரொலி: பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பதவி விலக அதிபர் வலியுறுத்தல்

இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ந்ததன் எதிரொலியாக, அந்நாட்டின் பாதுகாப்புத் துறை செயலர் ஹேமசிரி பெர்ணான்டோ மற்றும் காவல் துறை தலைவர் புஜித் ஜெயசுந்தர ஆகியோர் உடனடியாக பதவி விலக
இலங்கை தாக்குதல் எதிரொலி: பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பதவி விலக அதிபர் வலியுறுத்தல்

இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ந்ததன் எதிரொலியாக, அந்நாட்டின் பாதுகாப்புத் துறை செயலர் ஹேமசிரி பெர்ணான்டோ மற்றும் காவல் துறை தலைவர் புஜித் ஜெயசுந்தர ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று அதிபர் மைத்ரிபால சிறீசேனா வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் மூன்று தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்பட மொத்தம் 8 இடங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதல் மற்றும் குண்டுவெடிப்பில் 10 இந்தியர்கள் உள்பட 359 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

இலங்கையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தவிருப்பதாக, முன்கூட்டியே பாதுகாப்புத் துறை தலைவர்களுக்கு இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தகவல் அளித்ததாக ஊடகங்களில் தகவல் வெளியானது. இவ்வாறு தகவல் கிடைத்தும், அது குறித்து அதிபர் சிறீசேனாவுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் அதிகாரிகள் தகவல் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடமையைச் சரியாகச் செய்ய தவறியதற்காக பாதுகாப்புத் துறை உயரதிகாரிகள் பதவி விலக வேண்டும் என்று அதிபர் சிறீசேனா வலியுறுத்தியுள்ளார். தாக்குதல் நிகழ்ந்த பிறகு, புதன்கிழமை மக்களிடையே உரையாற்றிய அவர் கூறியதாவது:

நமது நாட்டில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தவிருப்பதாக அண்டை நாடுகளில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. அதைக் கருத்தில் கொண்டு, நாட்டில் பாதுகாப்பைப் பலப்படுத்த அதிகாரிகள் தவறிவிட்டனர். தனது கடமையை சரியாகச் செய்ய தவறியதற்காக பாதுகாப்புத் துறை செயலர் ஹேமசிரி பெர்ணான்டோ மற்றும் காவல் துறை தலைவர் புஜித் ஜெயசுந்தர ஆகியோர் பதவி விலக வேண்டும். அடுத்த 24 மணி நேரத்தில் பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் பணியிடத்தில் நிச்சயம் மிகப்பெரிய மாற்றம் இருக்கும்.

இலங்கையில் பயங்கரவாத சக்திகள் வலுப்பெற்று வருவதாகவும், பயங்கரவாதம் குறித்து வெளிநாடுகளில் சிலர் பயிற்சி பெறுவதாகவும் கடந்த 2017-ஆம் ஆண்டில் இருந்து நமக்கு உளவுத் துறை தகவல் கிடைத்து வருகிறது. அந்த பயங்கரவாதிகளை நமது பாதுகாப்பு படையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 

கிடைத்த தகவல்களைக் கொண்டு, பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளாததற்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அந்த தகவல்கள் குறித்து எனக்கு யாரும் தெரிவிக்கவில்லை. என்னதான் தகவல் கிடைத்தாலும், ஆதாரம் இல்லாமல் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள இயலாது. பயங்கரவாதத்தை தடுக்க தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நாட்டில் மீண்டும் இயல்பு நிலை திரும்பும் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com