பிலிப்பின்ஸில் திடீரென வீசிய சூறைக் காற்று காரணமாக, அந்த நாட்டின் இரு தீவுகளுக்கிடையே சென்று கொண்டிருந்த 3 படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 31 பேர் பலியாகினர். விபத்துப் பகுதியில் நடைபெற்ற மீட்புப் பணிகளில் 62 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர் (படம்). எனினும், நீரில் மூழ்கிய மேலும் 31 பேர் தொடர்ந்து மாயமாக உள்ளதால் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.