உக்ரைனிலுள்ள நட்சத்திர விடுதியில் சனிக்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
உக்ரைனின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள ஓடெஸா நகரில் டோக்கியோ ஸ்டார் நட்சத்திர விடுதி அமைந்துள்ளது.
இந்த விடுதியில் உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 1.34 மணிக்கு திடீரென தீப்பிடித்தது. அதையடுத்து அந்தப் பகுதிக்கு விரைந்த தீயணைப்புப் படையினர், 13 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்ததாக பேரிடர் மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். விபத்துப் பகுதியிலிருந்து 150 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விபத்துக்கு சதிவேலை காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.