அமெரிக்காவின் தெற்கு டகோட்டா மாகாணத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர், மேலும் 3 பேருக்கு காயம் ஏற்பட்டது.
சேம்பர்லின் விமானநிலையத்தில் இருந்து 12 பேருடன் சனிக்கிழமை மதியம் 12:30 மணியளவில் இதாஹோ ஃபால்ஸ் நகரத்துக்கு புறப்பட்ட விமானம் சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானதாக தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்கள் சியோக்ஸ் ஃபால்ஸ் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.