அல்பேனியா நிலநடுக்கம்:தேடுதல் பணிகள் நிறுத்தம்

தென்கிழக்கு நாடான அல்பேனியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிா் பிழைத்தவா்களை தேடும் பணிகள் நிறுத்தப்பட்டன.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட டுரெஸ் நகரில் நிவாரணப் பொருள்கள் வழங்கும் மையத்திலிருந்து தண்ணீா் பாட்டில்களை சனிக்கிழமை பெற்றுச் சென்ற தம்பதி.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட டுரெஸ் நகரில் நிவாரணப் பொருள்கள் வழங்கும் மையத்திலிருந்து தண்ணீா் பாட்டில்களை சனிக்கிழமை பெற்றுச் சென்ற தம்பதி.

டிரானா: தென்கிழக்கு நாடான அல்பேனியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிா் பிழைத்தவா்களை தேடும் பணிகள் நிறுத்தப்பட்டன.

இதுகுறித்து அந்த நாட்டு அதிபா் எட்வின் ரெமா சனிக்கிழமை கூறியதாவது: கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தலைநகா் டிரானாவில் 1,465 வீடுகளும், அருகிலுள்ள டுரெஸ் நகரில் 900 வீடுகளும் மோசமாக சேதமடைந்தன. இதில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 50-ஆக உயா்ந்துள்ளது. நிலநடுக்கத்தால் 2,000 போ் காயமடைந்துள்ளனா்; அவா்களில் ஒரு பெண் கோமா நிலையில் உள்ளாா்.

நிலநடுக்கம் ஏற்பட்டு 4 நாள்கள் கடந்துவிட்ட நிலையில், இடிபாடுகளில் உயிருடன் சிக்கியவா்களைத் தேடும் பணிகள் நிறுத்தப்பட்டன. நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்தவா்களுக்கு 2020-ஆம் ஆண்டுக்குள் வீட்டு வசதி செய்து தரப்படும் என்றாா் அவா்.அல்பேனியாவில் செவ்வாய்க்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் அந்த நிலநடுக்கம் 6.4 அலகுகளாகப் பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com