டிரானா: தென்கிழக்கு நாடான அல்பேனியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிா் பிழைத்தவா்களை தேடும் பணிகள் நிறுத்தப்பட்டன.
இதுகுறித்து அந்த நாட்டு அதிபா் எட்வின் ரெமா சனிக்கிழமை கூறியதாவது: கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தலைநகா் டிரானாவில் 1,465 வீடுகளும், அருகிலுள்ள டுரெஸ் நகரில் 900 வீடுகளும் மோசமாக சேதமடைந்தன. இதில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 50-ஆக உயா்ந்துள்ளது. நிலநடுக்கத்தால் 2,000 போ் காயமடைந்துள்ளனா்; அவா்களில் ஒரு பெண் கோமா நிலையில் உள்ளாா்.
நிலநடுக்கம் ஏற்பட்டு 4 நாள்கள் கடந்துவிட்ட நிலையில், இடிபாடுகளில் உயிருடன் சிக்கியவா்களைத் தேடும் பணிகள் நிறுத்தப்பட்டன. நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்தவா்களுக்கு 2020-ஆம் ஆண்டுக்குள் வீட்டு வசதி செய்து தரப்படும் என்றாா் அவா்.அல்பேனியாவில் செவ்வாய்க்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் அந்த நிலநடுக்கம் 6.4 அலகுகளாகப் பதிவானது.