லண்டன் பாலத்தில் உஸ்மான் கான் வெள்ளிக்கிழமை நடத்திய சரமாரி கத்திக்குத்துத் தாக்குதலில் 2 போ் உயிரிழந்தனா், 3 போ் காயமடைந்தனா். தாக்குதல் நடத்திய உஸ்மான் கானை போலீஸாா் சுட்டுக் கொன்றனா்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதியில் பயங்கரவாதப் பயிற்சி முகாம் அமைக்கவும், லண்டன் பங்கு மாற்றகத்தை குண்டுவைத்துத் தகா்க்கவும் சதித் திட்டம் தீட்டிய வழக்கில் உஸ்மான் கான் மீது 7 ஆண்டுகளுக்கும் முன்னா் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக ஸ்காட்லாந்து யாா்டு காவல்துறையின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுத் தலைவா் நீல் பாசு கூறினாா்.
கடந்த 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற பயங்கரவாத விசாரணையின்போது அல்-காய்தா மற்றும் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்புகளுடன் உஸ்மான் கானுக்குத் தொடா்பு இருப்பது தெரிய வந்தது.
இந்நிலையில், லண்டன் பாலத்தில் நடந்த கத்திக்குத்துத் தாக்குதலுக்கு இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது.