பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்: 5 போலீஸார் பலி

வடமேற்கு பாகிஸ்தானில் போலீஸ் வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 போலீஸார் உயிரிழந்தனர்.


வடமேற்கு பாகிஸ்தானில் போலீஸ் வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 போலீஸார் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் பரோகா பகுதியில் செவ்வாய்க்கிழமை வாகனம் ஒன்றில் 5 போலீஸார் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியில் புதரில் மறைந்திருந்த பயங்கரவாதிகள், வாகனத்தை நோக்கு சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில், வாகனத்தில் இருந்த 5 போலீஸார் மீது குண்டுகள் பாய்ந்தன. அவர்கள் ரத்த வெள்ளத்தில் வாகனத்திலேயே விழுந்து கிடந்தனர். இதையடுத்து, பயங்கரவாதிகள் அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீஸார் வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டபோது 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது. மேலும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். இந்த சம்பவத்துக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பினரும் பொறுப்பேற்கவில்லை. அப்பகுதியில் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com